Thursday, July 19, 2007

பெயர்ச்சி

இருளும் ஒளியும்
கலந்தடிக்கும் மலைக்காடுகளுக்குள்
மரங்கள் ஓங்கி வளர்ந்திருக்கின்றன
புற்களும் பூண்டுகளுக்கும் கீழே இடம்
காளானுக்கும் பூச்சிகளுக்கும்,
அதனூடே ஓடித்திரியும்
விலங்குகளுக்கும்
ஈக்களுக்கும் கூட.
நாங்கள்
மாறி மாறி உண்டு
ரத்தம் குடித்து
மற்றவரால் மாய்ந்து
உயிர்த்திருக்கின்றோம்.

பெரிய பெரிய எந்திரங்கள்
வந்திருக்கின்றன.
பெரும் வண்டிகளின் முதுகில் ஏறி
அவை மலையேறி வந்து நிற்கின்றன.
பாரந்தூக்க, பள்ளம் வெட்ட
மண்ணள்ள, ஆளேற்றிப் போக.
எங்கள் மலையிறக்கத்தில்
கூட்டமாய் வந்து நிற்கின்றன.

சத்தம் கேட்கிறது
புகை வருகிறது
உட்காட்டுக்கு
மெல்ல நகர்கின்றோம்.

0 comments: