Wednesday, July 18, 2007

சந்திப்பு

காலையில் பாதையோரத்தில்
அணிலொன்று,
சின்னஞ்சிறியது.
கொட்டையொன்றைக்
கொறித்திருந்தது.
வெய்யிலில் அதுவோர்
குழந்தையைப் போலிருந்தது.
சற்று நின்று பார்த்துவிட்டு
நான் என் வழித் தொடர்ந்தேன்.

0 comments: