காய்ந்த புற்களின் மேல்
மூச்சிறைக்க நடந்தேறுகிறேன்.
நானாடிய இடமென்ற போதும்
தேனோடிய திசையென்ற போதும்
இன்று
உயர்ந்து கடிதாயிருக்கிறது மலை.
இணைக்குரலின் துணையின்றி
இளைத்த பொழுதில்
தோள்தட்டக் கரமின்றி
மெல்ல மலைக்கிறேன் நான்.
வளர்ந்து சரிந்த பெரும்புயம்,
சிரசு, புட்டம் பெருந்தொடை
வல்லிசாய்க் கீழிழுக்கிறது புவி.
வயிற்றுத் தசையிழுபட
நாச்சுருள
சுனையைத் தேடிய தாகமொன்றே
மேலிழுக்க
மெல்ல ஏறுகிறேன் நான்.
Monday, July 23, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment