(வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று சொல்வதற்காக, சிறுவர்களிடம் மன்னிப்புக் கோருகிறது மலைக் கரடி)
ஒரு ஓவியக் கூடத்தினுள்
நெளிந்த கோடுகள்,
நிமிர்ந்த மேடுகள் என்று
வண்ணக் கலவைகளின் வழியே
ஈர்க்கப் பட்டுச் செல்லும்
பார்வையாளனைப் போல்
இல்லாவிடில்,
சிறுவன் ஒருவன்
கடைப் பொம்மைகளைக் கண்டு
குதூகலிப்பதும், எடுத்தெடுத்து
விளையாடிப் பார்ப்பதும் போல்,
அல்லது,
தாகமும் நேரமும் கொண்ட
வாசிப்பாளன் ஒருவன்
புத்தகங்களைப் படித்துத் தீர்த்து
தாகம் தணிவதைப் போல்,
இன்னும் சொல்வதானால்,
ஓடி ஓடிக் கொத்தித் திரியும்
அணிலையும், குருவிகளையும் போல்
இப்படித்தான் எனக்கும்
கரடிகளின் முலைகளின் மீதுள்ள
காதலும் என்றேன்,
கறுத்த அழகான ஆப்பிரிக்கக்
கரடி ஒன்றின் கைகளைப் பிடித்தபடி.
வேறென்ன தத்துவமெல்லாம்
வைத்திருக்கிறாய் என்றாள்.
இலக்கியங்கள், சிற்பங்கள், ஓவியங்கள்
சிலைகள்
எல்லாவற்றிலுமிருந்து விதவிதமான
முலைகளை எடுத்துக் காட்டினேன்.
எங்கள் வரலாறு முலைகளால் எழுதப்பட்டது.
எங்கள் பெண்களின் துணிமணிகள்
முலைகளுக்கானவை.
சினிமா, இலக்கியம் எல்லாம் இன்றும்கூட
முலைகளின் கருவட்டத்தைச் சுற்றியே
புனையப் படுகின்றன.
சில நேரம் குழந்தைகள் பால் அருந்துவதும்
அங்கு நடக்கும்.
இப்படியாக
நான் பேசப் பேச
சிறு வார்த்தைகளுடன் அவள்
கேட்டுக்கொண்டேயிருந்தாள்.
பின்னர்
அந்த நடன விடுதியில்
மூன்று பாட்டு நேரத்துக்கு
எனக்குத் தன் முலைகளைத் தந்து ஆடியவளுக்கு
காசையும் நன்றியையும் தந்து
திரும்பி
என் காட்டுக்குள் நுழைந்தேன்.
Thursday, August 16, 2007
Thursday, August 9, 2007
தனிக்கரடி
கோடுகளை மனம்தான் வரைகின்றது
எல்லாம் இருக்கின்றன, அவ்வப்படியே.
நானிருக்கும் நிலையும், என் மனமும்தான்
இணைத்துப் பார்க்கின்றன.
கடந்த பாதையும், சேர்த்த அனுபவங்களும்
விழிப்புணர்வில் ஆழ்ந்திருக்கும் நிலையும்
இவற்றைத் தீர்மானிக்கின்றன.
மனதை நிகழ்வுகளிலிருந்து கழட்டிவிட்ட
இலக்கியக் கரடிகளுக்கும்
கலகக் கரடிகளுக்கும்
இந்த இணைப்புக் கோடுகள் ஒன்றில்லை.
தனிமை தன் தடிமனான தூரிகையால்
என் கோடுகளை வரைந்து தள்ள
கானகத்தில் அலைந்து திரிகின்றேன்.
எல்லாம் இருக்கின்றன, அவ்வப்படியே.
நானிருக்கும் நிலையும், என் மனமும்தான்
இணைத்துப் பார்க்கின்றன.
கடந்த பாதையும், சேர்த்த அனுபவங்களும்
விழிப்புணர்வில் ஆழ்ந்திருக்கும் நிலையும்
இவற்றைத் தீர்மானிக்கின்றன.
மனதை நிகழ்வுகளிலிருந்து கழட்டிவிட்ட
இலக்கியக் கரடிகளுக்கும்
கலகக் கரடிகளுக்கும்
இந்த இணைப்புக் கோடுகள் ஒன்றில்லை.
தனிமை தன் தடிமனான தூரிகையால்
என் கோடுகளை வரைந்து தள்ள
கானகத்தில் அலைந்து திரிகின்றேன்.
Subscribe to:
Posts (Atom)