கோடுகளை மனம்தான் வரைகின்றது
எல்லாம் இருக்கின்றன, அவ்வப்படியே.
நானிருக்கும் நிலையும், என் மனமும்தான்
இணைத்துப் பார்க்கின்றன.
கடந்த பாதையும், சேர்த்த அனுபவங்களும்
விழிப்புணர்வில் ஆழ்ந்திருக்கும் நிலையும்
இவற்றைத் தீர்மானிக்கின்றன.
மனதை நிகழ்வுகளிலிருந்து கழட்டிவிட்ட
இலக்கியக் கரடிகளுக்கும்
கலகக் கரடிகளுக்கும்
இந்த இணைப்புக் கோடுகள் ஒன்றில்லை.
தனிமை தன் தடிமனான தூரிகையால்
என் கோடுகளை வரைந்து தள்ள
கானகத்தில் அலைந்து திரிகின்றேன்.
Thursday, August 9, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment