இரவை வானம் விழுங்குகிறது
வானின் மூச்சாய்ப் பறக்கும்
மூடுபனியின் புகையுடம்பு மெல்லத் துலங்குகிறது
மட்கிய மரங்களின் மணம் சூடாய் வந்து
நாசிக்குள் ஏறுகிறது
கார்காலத்துக் காலை வரப்போகின்றது
மரங்களைத் தாண்டிய வானத்தில்
குருவிகள் பறக்கின்றன
பறக்கும் மூடுபனிக்குள் நான் மிதக்கிறேன்.
Thursday, November 1, 2007
Wednesday, September 19, 2007
தோழமை
என் கைகளால் வீசிப் பறக்கடிக்க முடியாமலும்
பெருமழைகளால் கரைக்க முடியாமலும்
மலைகளைத் தாண்டி உயர எழுகின்றது தூசி-
அங்கே புதிய கட்டிடங்களைக் கட்டுகிறார்கள்.
கரடிகளுக்கான இடம் குறுகும்போது
மலைகள் குலுங்கி அழுகின்றன.
பெருமழைகளால் கரைக்க முடியாமலும்
மலைகளைத் தாண்டி உயர எழுகின்றது தூசி-
அங்கே புதிய கட்டிடங்களைக் கட்டுகிறார்கள்.
கரடிகளுக்கான இடம் குறுகும்போது
மலைகள் குலுங்கி அழுகின்றன.
Thursday, August 16, 2007
கரடிகளின் உலகத்தில் மார்புகள்
(வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று சொல்வதற்காக, சிறுவர்களிடம் மன்னிப்புக் கோருகிறது மலைக் கரடி)
ஒரு ஓவியக் கூடத்தினுள்
நெளிந்த கோடுகள்,
நிமிர்ந்த மேடுகள் என்று
வண்ணக் கலவைகளின் வழியே
ஈர்க்கப் பட்டுச் செல்லும்
பார்வையாளனைப் போல்
இல்லாவிடில்,
சிறுவன் ஒருவன்
கடைப் பொம்மைகளைக் கண்டு
குதூகலிப்பதும், எடுத்தெடுத்து
விளையாடிப் பார்ப்பதும் போல்,
அல்லது,
தாகமும் நேரமும் கொண்ட
வாசிப்பாளன் ஒருவன்
புத்தகங்களைப் படித்துத் தீர்த்து
தாகம் தணிவதைப் போல்,
இன்னும் சொல்வதானால்,
ஓடி ஓடிக் கொத்தித் திரியும்
அணிலையும், குருவிகளையும் போல்
இப்படித்தான் எனக்கும்
கரடிகளின் முலைகளின் மீதுள்ள
காதலும் என்றேன்,
கறுத்த அழகான ஆப்பிரிக்கக்
கரடி ஒன்றின் கைகளைப் பிடித்தபடி.
வேறென்ன தத்துவமெல்லாம்
வைத்திருக்கிறாய் என்றாள்.
இலக்கியங்கள், சிற்பங்கள், ஓவியங்கள்
சிலைகள்
எல்லாவற்றிலுமிருந்து விதவிதமான
முலைகளை எடுத்துக் காட்டினேன்.
எங்கள் வரலாறு முலைகளால் எழுதப்பட்டது.
எங்கள் பெண்களின் துணிமணிகள்
முலைகளுக்கானவை.
சினிமா, இலக்கியம் எல்லாம் இன்றும்கூட
முலைகளின் கருவட்டத்தைச் சுற்றியே
புனையப் படுகின்றன.
சில நேரம் குழந்தைகள் பால் அருந்துவதும்
அங்கு நடக்கும்.
இப்படியாக
நான் பேசப் பேச
சிறு வார்த்தைகளுடன் அவள்
கேட்டுக்கொண்டேயிருந்தாள்.
பின்னர்
அந்த நடன விடுதியில்
மூன்று பாட்டு நேரத்துக்கு
எனக்குத் தன் முலைகளைத் தந்து ஆடியவளுக்கு
காசையும் நன்றியையும் தந்து
திரும்பி
என் காட்டுக்குள் நுழைந்தேன்.
ஒரு ஓவியக் கூடத்தினுள்
நெளிந்த கோடுகள்,
நிமிர்ந்த மேடுகள் என்று
வண்ணக் கலவைகளின் வழியே
ஈர்க்கப் பட்டுச் செல்லும்
பார்வையாளனைப் போல்
இல்லாவிடில்,
சிறுவன் ஒருவன்
கடைப் பொம்மைகளைக் கண்டு
குதூகலிப்பதும், எடுத்தெடுத்து
விளையாடிப் பார்ப்பதும் போல்,
அல்லது,
தாகமும் நேரமும் கொண்ட
வாசிப்பாளன் ஒருவன்
புத்தகங்களைப் படித்துத் தீர்த்து
தாகம் தணிவதைப் போல்,
இன்னும் சொல்வதானால்,
ஓடி ஓடிக் கொத்தித் திரியும்
அணிலையும், குருவிகளையும் போல்
இப்படித்தான் எனக்கும்
கரடிகளின் முலைகளின் மீதுள்ள
காதலும் என்றேன்,
கறுத்த அழகான ஆப்பிரிக்கக்
கரடி ஒன்றின் கைகளைப் பிடித்தபடி.
வேறென்ன தத்துவமெல்லாம்
வைத்திருக்கிறாய் என்றாள்.
இலக்கியங்கள், சிற்பங்கள், ஓவியங்கள்
சிலைகள்
எல்லாவற்றிலுமிருந்து விதவிதமான
முலைகளை எடுத்துக் காட்டினேன்.
எங்கள் வரலாறு முலைகளால் எழுதப்பட்டது.
எங்கள் பெண்களின் துணிமணிகள்
முலைகளுக்கானவை.
சினிமா, இலக்கியம் எல்லாம் இன்றும்கூட
முலைகளின் கருவட்டத்தைச் சுற்றியே
புனையப் படுகின்றன.
சில நேரம் குழந்தைகள் பால் அருந்துவதும்
அங்கு நடக்கும்.
இப்படியாக
நான் பேசப் பேச
சிறு வார்த்தைகளுடன் அவள்
கேட்டுக்கொண்டேயிருந்தாள்.
பின்னர்
அந்த நடன விடுதியில்
மூன்று பாட்டு நேரத்துக்கு
எனக்குத் தன் முலைகளைத் தந்து ஆடியவளுக்கு
காசையும் நன்றியையும் தந்து
திரும்பி
என் காட்டுக்குள் நுழைந்தேன்.
Thursday, August 9, 2007
தனிக்கரடி
கோடுகளை மனம்தான் வரைகின்றது
எல்லாம் இருக்கின்றன, அவ்வப்படியே.
நானிருக்கும் நிலையும், என் மனமும்தான்
இணைத்துப் பார்க்கின்றன.
கடந்த பாதையும், சேர்த்த அனுபவங்களும்
விழிப்புணர்வில் ஆழ்ந்திருக்கும் நிலையும்
இவற்றைத் தீர்மானிக்கின்றன.
மனதை நிகழ்வுகளிலிருந்து கழட்டிவிட்ட
இலக்கியக் கரடிகளுக்கும்
கலகக் கரடிகளுக்கும்
இந்த இணைப்புக் கோடுகள் ஒன்றில்லை.
தனிமை தன் தடிமனான தூரிகையால்
என் கோடுகளை வரைந்து தள்ள
கானகத்தில் அலைந்து திரிகின்றேன்.
எல்லாம் இருக்கின்றன, அவ்வப்படியே.
நானிருக்கும் நிலையும், என் மனமும்தான்
இணைத்துப் பார்க்கின்றன.
கடந்த பாதையும், சேர்த்த அனுபவங்களும்
விழிப்புணர்வில் ஆழ்ந்திருக்கும் நிலையும்
இவற்றைத் தீர்மானிக்கின்றன.
மனதை நிகழ்வுகளிலிருந்து கழட்டிவிட்ட
இலக்கியக் கரடிகளுக்கும்
கலகக் கரடிகளுக்கும்
இந்த இணைப்புக் கோடுகள் ஒன்றில்லை.
தனிமை தன் தடிமனான தூரிகையால்
என் கோடுகளை வரைந்து தள்ள
கானகத்தில் அலைந்து திரிகின்றேன்.
Sunday, July 29, 2007
தண்டாயுதத்தைப் பற்றி
எதையும் இறக்கிவைக்க முடியவில்லை
பளு கூடிக்கொண்டே வருகிறது
என் கழுத்தும் தோள்களும் வலிக்க
சுமப்பதில் எனக்குச் சம்மதந்தான்
ஆனால் எவ்வளவு காலத்துக்கு?
தெரியாது.
என்றேனும் எல்லாவற்றையும் கீழே போட்டுவிட்டு
என் தண்ணீர்க் கலயத்தையும்
ஒரு குச்சியையும் தூக்கிக் கொண்டு
ஓடிவிடப் போகிறேன்.
குச்சி!?
குச்சியை, அதுதான் தண்டாயுதத்தைப் பற்றி
ஒரு யோசனை வருகிறது,
காட்டுக்கு வந்து சுற்றிப்பாருங்கள்
கையில் ஒரு குச்சியிருந்தால் பலம்.
ஊன்றிக் கொள்ள
வாய்க்காலில் ஆழம்பார்க்க
சிலந்திவலை கலைத்து நடக்க
துட்ட மிருகங்கள் வந்தால் மருட்ட
எல்லாவற்றுக்கும் ஒரு குச்சி போதும்.
அக்காலச் சாமியார்கள் திரிந்தது காடு
அவர்களுக்குக் குச்சி சரி.
இக்காலத்துக் காரேறு சாமிகளுக்கு
குச்சி ஏன்?
குச்சிகளில் துணிகளைக் கட்டி
துறவுச் சின்னமாய்
சுமந்து திரியும்போது
அந்த மரக்கிளை உண்மையில்
செத்துப் போகிறது.
பளு கூடிக்கொண்டே வருகிறது
என் கழுத்தும் தோள்களும் வலிக்க
சுமப்பதில் எனக்குச் சம்மதந்தான்
ஆனால் எவ்வளவு காலத்துக்கு?
தெரியாது.
என்றேனும் எல்லாவற்றையும் கீழே போட்டுவிட்டு
என் தண்ணீர்க் கலயத்தையும்
ஒரு குச்சியையும் தூக்கிக் கொண்டு
ஓடிவிடப் போகிறேன்.
குச்சி!?
குச்சியை, அதுதான் தண்டாயுதத்தைப் பற்றி
ஒரு யோசனை வருகிறது,
காட்டுக்கு வந்து சுற்றிப்பாருங்கள்
கையில் ஒரு குச்சியிருந்தால் பலம்.
ஊன்றிக் கொள்ள
வாய்க்காலில் ஆழம்பார்க்க
சிலந்திவலை கலைத்து நடக்க
துட்ட மிருகங்கள் வந்தால் மருட்ட
எல்லாவற்றுக்கும் ஒரு குச்சி போதும்.
அக்காலச் சாமியார்கள் திரிந்தது காடு
அவர்களுக்குக் குச்சி சரி.
இக்காலத்துக் காரேறு சாமிகளுக்கு
குச்சி ஏன்?
குச்சிகளில் துணிகளைக் கட்டி
துறவுச் சின்னமாய்
சுமந்து திரியும்போது
அந்த மரக்கிளை உண்மையில்
செத்துப் போகிறது.
Saturday, July 28, 2007
காலத்தின் பசி
பைன் மர உயரத்துக்கும்
இருந்தார்களாம் மூதாதையர்கள்
சொல்லிவைத்த இடத்தில்
கனியிருக்கும் தேனிருக்கும்
கேளிக்கைக் கூட்ட்மாகக்
கும்மரித்து இருப்பாராம்.
புத்தி வலிதாம் செயல் வலிதாம்
பெருங்கிழவி சொல்லுவாள்.
அவர்களை யாரும் இப்போது பார்த்ததில்லை
காலம் அள்ளிக்கொண்டு போனதாம்.
எங்களையும் காலம் இழுக்கப் பார்க்கும்
நான் மரங்களில் இருக்கும்போதெல்லாம்
கீழே இழுப்பதென்ன, காலம்தானே?
காலம் பொல்லாதது
கடும்பசி கொண்டது
நன்றாய்ப் பிடித்துக் கொள்ளாவிடில்
விழுத்தாட்டி உண்டுவிடும் என்று
குட்டிக் கரடிகளுக்குச் சொல்லுகிறேன்.
இருந்தார்களாம் மூதாதையர்கள்
சொல்லிவைத்த இடத்தில்
கனியிருக்கும் தேனிருக்கும்
கேளிக்கைக் கூட்ட்மாகக்
கும்மரித்து இருப்பாராம்.
புத்தி வலிதாம் செயல் வலிதாம்
பெருங்கிழவி சொல்லுவாள்.
அவர்களை யாரும் இப்போது பார்த்ததில்லை
காலம் அள்ளிக்கொண்டு போனதாம்.
எங்களையும் காலம் இழுக்கப் பார்க்கும்
நான் மரங்களில் இருக்கும்போதெல்லாம்
கீழே இழுப்பதென்ன, காலம்தானே?
காலம் பொல்லாதது
கடும்பசி கொண்டது
நன்றாய்ப் பிடித்துக் கொள்ளாவிடில்
விழுத்தாட்டி உண்டுவிடும் என்று
குட்டிக் கரடிகளுக்குச் சொல்லுகிறேன்.
Wednesday, July 25, 2007
வேறென்ன?
தூரத்து மலைமுகட்டில்
பனிக்கோடு ஒளிர்கிறது
பள்ளத்தாக்குத் தரை பசிந்திருக்கிறது.
மரங்களினூடே வழியும்
கோடை வெய்யிலை
வாங்கிக் குடிக்கிறேன்.
காட்டோடு சேர்ந்து
அமைதியிலிருக்கிறேன்.
இப்போதைக்கு இதுதான்.
பனிக்கோடு ஒளிர்கிறது
பள்ளத்தாக்குத் தரை பசிந்திருக்கிறது.
மரங்களினூடே வழியும்
கோடை வெய்யிலை
வாங்கிக் குடிக்கிறேன்.
காட்டோடு சேர்ந்து
அமைதியிலிருக்கிறேன்.
இப்போதைக்கு இதுதான்.
Subscribe to:
Posts (Atom)