Thursday, November 1, 2007

காலையின் மடியில்

இரவை வானம் விழுங்குகிறது
வானின் மூச்சாய்ப் பறக்கும்
மூடுபனியின் புகையுடம்பு மெல்லத் துலங்குகிறது
மட்கிய மரங்களின் மணம் சூடாய் வந்து
நாசிக்குள் ஏறுகிறது
கார்காலத்துக் காலை வரப்போகின்றது
மரங்களைத் தாண்டிய வானத்தில்
குருவிகள் பறக்கின்றன
பறக்கும் மூடுபனிக்குள் நான் மிதக்கிறேன்.