Saturday, July 28, 2007

காலத்தின் பசி

பைன் மர உயரத்துக்கும்
இருந்தார்களாம் மூதாதையர்கள்
சொல்லிவைத்த இடத்தில்
கனியிருக்கும் தேனிருக்கும்
கேளிக்கைக் கூட்ட்மாகக்
கும்மரித்து இருப்பாராம்.
புத்தி வலிதாம் செயல் வலிதாம்
பெருங்கிழவி சொல்லுவாள்.
அவர்களை யாரும் இப்போது பார்த்ததில்லை
காலம் அள்ளிக்கொண்டு போனதாம்.

எங்களையும் காலம் இழுக்கப் பார்க்கும்
நான் மரங்களில் இருக்கும்போதெல்லாம்
கீழே இழுப்பதென்ன, காலம்தானே?
காலம் பொல்லாதது
கடும்பசி கொண்டது
நன்றாய்ப் பிடித்துக் கொள்ளாவிடில்
விழுத்தாட்டி உண்டுவிடும் என்று
குட்டிக் கரடிகளுக்குச் சொல்லுகிறேன்.

0 comments: