சிவந்த கொண்டையும்
வண்ணக் கழுத்தும்
மிளிரும் இறக்கைகளும்
வலிந்த கால்களுமாய்
ஒரு சேவல்
இந்தக் காட்டுக்குள்
சுற்றிக் கொண்டிருந்தது.
காலைகளில் அது
கூவிக் கொண்டிருந்தது.
நல்ல இளசு.
சாகும் வயதில்லை.
யாரோ பிடித்துத் தின்றிருக்கவெண்டும்.
Wednesday, July 18, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment