Wednesday, July 18, 2007

விடியலின் குரல்

சிவந்த கொண்டையும்
வண்ணக் கழுத்தும்
மிளிரும் இறக்கைகளும்
வலிந்த கால்களுமாய்
ஒரு சேவல்
இந்தக் காட்டுக்குள்
சுற்றிக் கொண்டிருந்தது.
காலைகளில் அது
கூவிக் கொண்டிருந்தது.
நல்ல இளசு.
சாகும் வயதில்லை.
யாரோ பிடித்துத் தின்றிருக்கவெண்டும்.

0 comments: