Thursday, July 19, 2007

வாய்க்கால்

வளர்ந்த மரங்களுக்குக் கீழே
செடிகளுக்கும் பாறைகளுக்குமிடையே
சிறியதாய் ஓடிக்கொண்டிருக்கிறது
வாய்க்கால்.
தாகம் தீர்க்கும்
விழுந்து புரண்டால்
சற்றே தங்கிப் பின் ஓடும்.

நேற்றைக்குப் பள்ளத்தாக்கில்
நாய்களின் குரைப்பு
எத்தனை நாய்களோ பெருங்கூட்டம்
எல்லாமாய்ச் சேர்ந்து ஒரே குரைப்பு
மலையெங்கும் அதிர்ந்தது குரைப்பு
நான் வாய்க்கால் தண்ணீரில்
முகம் நனைக்கிறேன்.

0 comments: