Wednesday, July 18, 2007

இதுவும் காலையினியல்பு

கதிரோனின் வெள்ளொளி
மலை முகடுகளில்
பசிய இலைகளில்
வனத்து மரங்களில்
சின்னஞ்சிறிய பூக்களில்
காக்கைகளில்
பட்டு ஒளிர்கிறது.

நான் நடந்துகொண்டிருந்தேன்
நத்தைகள் ஊர்ந்துகொண்டிருந்தன
டொப்
அறியாது பட்டதுதானென்றாலும்
நத்தைக் கூட்டுக்கில்லை
என் பாரத்தைத் தாங்கும் வலிவு.

1 comments:

said...

அய்யோ பாவம் நத்தை..

நல்லா எழுதி இருக்கீங்க.