அருகேயோடும் சிற்றோடையின்
ஊற்றுக்கண், போக்கிடம்,
அதில் கரைந்த உப்பு,
ஆவியாதல்
எல்லாவற்றையும் பேச
கரடிகளின் கூட்டம் நடந்தது.
பொன்முடிக் கரடிகள்
முடியைச் சிலுப்பி,
வழுக்கைக் கரடிகள்
தலையைத் தடவி,
இளங்கரடிகள் மாரினை அகட்டி,
மற்றும் சில தம் குறிகளைக் காட்டி.
எங்கேனும் சந்திக்க நேரும்போதெல்லாம்
ஆண் கரடிகள் ஆண்மையையும்,
பெண் கரடிகள் பெண்மையையும்
காட்டிக்கொள்கின்றன.
சொல்வதை மட்டும் சொல்ல
ஏன் யாருக்கும் தெரிவதில்லை?
Wednesday, July 18, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment