Thursday, July 19, 2007

தனிமையில்

தாண்டமுடியாத எல்லைகளை நான்
சுற்றிச் சுற்றி வருகிறேன்
தாகமும் பசியும்
தாளவொனா வெறுமையும்
உட்படிந்த இருளும்
வந்து வந்து அறைகின்றன
காற்றில் மரங்கள் முறிகின்றன
விழுந்த மரமொன்றின்மேல் படுத்துக்கொண்டு
வானத்தைப் பார்க்கிறேன்
கானகத்தைக் காற்று இசைக்கிறது.

0 comments: