மேகம் சூழ்ந்து
அமைதியாயிருக்கிறது வானம்.
துளிகளைத் தூவ
மெல்லத் திறக்கிறது
வானின் கதவு.
வீழும் துளிகளில் கிளர்கிற புழுதி
எழுகிறது பறக்கிறது,
மீண்டும் துளியொன்றில் குளித்து
மண்ணோடு படிகிறது.
என் மயிர்ச்சடையைத்
தாண்டியொரு மழைத்துளி
மெல்ல உள்ளிறங்கிச்
சிலிர்ப்பைத் தருகிறது.
பாறையொன்றில் அமர்ந்து
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
Tuesday, July 17, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment